அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி
வங்கதேசத்தில் அக்டோபர் 1 முதல் 15 ஆம் தேதி வரை மகளிர் டி20 போட்டிக்கான ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட வீரர்கள் குழுவை BCCI அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் களமிறங்க உள்ளனர்.மேலும் இந்த அணியில் ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சப்பினேனி மேகனா, தயாளன் ஹேமலதா மற்றும் கேபி நவ்கிரே ஆகிய பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனை தொடர்ந்து ரேணுகா சிங், மேக்னா சிங் மற்றும் பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் உள்ளனர். இந்த வீராங்கனைகள் கொண்டு இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதனை தொடர்ந்து 7 ஆம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
மகளிர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, தயாளன் சிங், மேகனா சிங், மேகனா ரேணுகா தாக்கூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கேபி நவ்கிரே
காத்திருப்பு வீரர்கள்: தனியா சப்னா பாட்டியா, சிம்ரன் தில் பகதூர்