ஊழல் தடுப்பு விதிகளை மீறிய கிரிக்கெட் வீரர்…, 6 ஆண்டுகள் விளையாட தடை விதித்த ஐசிசி!!

0
ஊழல் தடுப்பு விதிகளை மீறிய கிரிக்கெட் வீரர்..., 6 ஆண்டுகள் விளையாட தடை விதித்த ஐசிசி!!
ஊழல் தடுப்பு விதிகளை மீறிய கிரிக்கெட் வீரர்..., 6 ஆண்டுகள் விளையாட தடை விதித்த ஐசிசி!!

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலக கோப்பை தொடரில், சர்வதேச அணியான வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டது. உலக கோப்பை தொடரே நடந்து முடிந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமாகவே இருந்தது. இந்நிலையில், 2012, 2016-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்த மார்லன் சாமுவேல்ஸுக்கு ஐசிசி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டில் அபுதாபி டி10 லீக் தொடரில் சாமுவேல்ஸ் விளையாடியபோது ஊழல் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தடுப்பு விதிமுறைகளை மீறியதாக புகார் எழுப்பட்டது. இந்த புகார் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதால், இவருக்கு ஐசிசியானது 6 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட்டுகளிலும் விளையாட தடை விதித்துள்ளது. இந்த தடை இம்மாதம் (நவம்பர்) முதல் 2029 ஆம் ஆண்டு வரை உள்ளது. இவர், சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். இனி இந்த போட்டிகளிலும் இவருக்கு விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

மறக்குமா நெஞ்சம்.. மன சோகத்தில் இந்திய வீரர்.., வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here