தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

0
தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 12ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here