தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கியதில் இருந்தே ஆங்காங்கே மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடஙக்ளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 40 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 21ம் தேதி வரையும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இன்று முதல் 19ம் தேதி வரையிலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.