தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வானிலை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், இலங்கை கடற்பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுவை மாற்றம் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் 1 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.