தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா குழந்தை வந்ததற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து இருக்கிறார். அந்த வகையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் ‘ஜவான்’ மற்றும் ‘இறைவன்’ போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. பொதுவாக, தான் நடிக்கும் திரைப்படங்களுக்கான ப்ரோமோஷன் பணிகளில் நயன்தாரா கலந்து கொள்வது இல்லை என்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் இருந்து வருகிறது.
முத்திய ரீல்ஸ் மோகம்….,ஐபோனுக்காக குழந்தையை விற்ற தம்பதி….,இப்படியும் இருப்பாங்களா?
இது குறித்து நடிகர் விஷால் கூறுகையில், ‘நயன்தாரா அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கான ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொள்வது இல்லை. இது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அவரை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், அவர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டால் நன்றாகத் தான் இருக்கும். நடிகர்கள் தங்களது படத்திற்காக ப்ரோமோஷன் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.