ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள், தங்களது படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த சூழலில் நேற்று (நவம்பர் 19) நள்ளிரவு அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தாலும் 50 க்கும் மேலான படகுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதைத்தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் தான் படகுகளுக்கு தீ வைத்திருக்கலாம் என மீனவர்கள் சந்தேகித்து வந்தனர். ஆனாலும் முதற்கட்ட விசாரணையில் படகில் இருந்த LPG சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.