‘நான் இப்படி விளையாடியதற்கு காரணம் அவங்க தான்’ – உண்மையை உடைத்த விராட் கோலி!!

0

கடைசி T20 போட்டியில் சூர்ய குமாருடன் அமைத்த பார்ட்னர்ஷிப் குறித்து விராட் கோலி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

விராட் VS சூர்யகுமார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் ஆகியோரின் சிறப்பான பார்ட்னர் ஷிப்பால் தான் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இருவருமே அரை சதம் கடந்து ரன்கள் குவித்தனர். இவர்கள் ரன் குவித்ததை விட இவர்களது பார்ட்னர்ஷிப் தான் தற்போது வரை அனைவராலும் பெருமையாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் மற்றும் ராகுல் டக் அவுட் ஆனதால் சூர்யகுமார் மற்றும் விராட் களமிறங்கினர். இதில் சூர்யகுமார் பேட்டிங் செய்த வரை, விராட் கோலி பெரிய ஷாட்கள் எதுவும் விளையாடாமல் சிங்கிள்ஸ் ஆடி ரன் குவித்தார். ஆனால் சூர்யகுமார் ஆட்டமிழந்த உடன் சிக்ஸ், பவுண்டரி என விளாசினார். மேலும் அந்த நேரத்தில் ஒரு சீனியர் பேட்ஸ்மேன் எப்படி விளையாடுவாரோ, அது போன்று விராட் கோலி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தேசிய விளையாட்டு 2022.., டென்னிஸ் போட்டி முதல் கிரிக்கெட் போட்டி வரை.., முழு விவரம் உள்ளே!!

விராட் கோலி விளையாடிய விதம் அனைவரையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். இது குறித்து அவரிடம் கேட்ட போது, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கூறியதை வைத்து தான் இவ்வாறு செய்தேன் என தெரிவித்துள்ளார். இவர்கள் , என்னிடம் சூர்யகுமார் நன்றாக விளையாடுவார். எனவே அவரிடம் கடைசி வரை பார்ட்னர் ஷிப் அமைத்து சிங்கிள்ஸ் விளையாடுங்க என கூறினார்கள். இதனால் தான் நான் அதை செய்தேன் என விராட் உண்மையை உடைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here