தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான பாலாவுக்கும், தல அஜீத்துக்கும் இடையிலான பிரச்சனை என்ன என்று பிரபல பத்திரிகையாளர் விளக்கியுள்ளார்.
பரபரப்பு பேட்டி:
தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடி தந்த படைப்பாளி என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் பாலா. சேது திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, அடுத்தடுத்து வெற்றி படங்களை அள்ளி கொடுத்தார். இந்நிலையில் இயக்குநர் பாலாவுக்கும், நடிகர் அஜித்துக்கும் இடையேயான பிரச்சனை குறித்து பிரபல பத்திரிகையாளர் பேட்டி அளித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பாலா இயக்கிய வெற்றி படங்களில் ஒன்றான, “நான் கடவுள்” படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படத்தில் முன்னதாக நடிகர் அஜித் தான் கமிட் ஆகி இருந்தார். மேலும் நான் கடவுள் படத்திற்காக பாலா சொன்னதன் பேரில், அஜித், நீளமாக முடி மற்றும் தாடியை வளர்த்தார். மேலும் இந்த படத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக அஜித்திற்கு கொடுத்திருந்தார் பாலா. இருப்பினும் ஒரு சமயத்தில் அஜித் மற்றும் பாலாவுக்கும் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார்.
இதையடுத்து அடுத்து அஜித் மற்றும் பாலா இருவரும் ஒரு ஹோட்டல் அறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது படத்திற்காக முன்பணம் கொடுத்த தேதியில் இருந்து, வட்டி போட்டு பணத்தை தருமாறு அஜித்திடம் பாலா கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் இயக்குநர் பாலா தகாத வார்த்தைகளால் அஜித்தை திட்டினார் என்றும், இதனால் பெரிய வாக்குவாதமும் அங்கே அரங்கேறியது என்றும் பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.