விராட் கோலிக்காக ரசிகர்கள் செய்த அந்த செயல்…, வெளியான வைரல் சம்பவம்!!

0
விராட் கோலிக்காக ரசிகர்கள் செய்த அந்த செயல்..., வெளியான வைரல் சம்பவம்!!
விராட் கோலிக்காக ரசிகர்கள் செய்த அந்த செயல்..., வெளியான வைரல் சம்பவம்!!

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவனமும் தற்போது உலக கோப்பை தொடரை யார் வெல்வார் என்பது தான். இந்த உலக கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் தனது சொந்த மண்ணில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களின் பங்காளிக்கப்பும் இன்றியமையாததாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விராட் கோலிக்காக சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் நிறுவனம் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ, யாவ் மிங் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரிசையில் விராட் கோலியின் சிலையை வடிவமைத்து சிங்கப்பூர் மேடம் டுசேட்ஸ் விளையாட்டு மண்டலத்தில் வைத்துள்னர். இது குறித்து விராட் கோலி, “எனது உருவத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மற்றும் நம்பமுடியாத உழைப்பை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த வாழ்நாள் அனுபவத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்த மேடம் டுசாட்ஸ் அவர்களுக்கு நன்றி. எனது ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையில் வெற்றி பாதைக்கு திரும்பிய ஆஸ்திரேலியா…, தோல்வியின் பிடியில் சிக்கிய இலங்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here