தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் மழைக்கு அதிக வாய்ப்புக்கு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, தமிழகத்தை பொறுத்த வரையில் இன்று (அக்டோபர் 17) 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் மேகமூட்டத்துடனே இருக்குமே தவிர, நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.