தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் 1.065 கோடி குடும்ப தலைவிகளுக்கு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், தற்போது மேல்முறையீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இம்மாதத்திற்கான தவணை அக்டோபர் 14ஆம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் கடந்த மாதம் உரிமை தொகை பெற்றவர்களில் தகுதியற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் என 8,833 பேர் நீக்கம் செய்யப்பட்டதால், அவர்களின் வங்கி கணக்கில் 2வது தவணை வரவு செய்யப்படவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கலைஞர் மகளிர் திட்டத்தில் கூடுதலாக 5,041 குடும்ப தலைவிகள் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிமை தொகை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.