கடந்த சில தினங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடும் போர் நிலவி வருகிறது. இந்த போரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்கா இல்லினாய்ஸ் மாகாணத்தில் பாலஸ்தீன சிறுவன் மத வெறுப்பால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அமெரிக்கவாழ் பாலஸ்தீன குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் மற்றும் அவனது தாயாரை வீட்டு உரிமையாளர் ஜோசப் ஸூபா (வயது 71) கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் சிறுவன் உடலில் 26 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று மழை கன்பார்ம்…, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இதையடுத்து ஜோசப் ஸூபாவை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில், இஸ்ரேல் -ஹமாஸ் போர் மத வெறுப்பு காரணமாக படுகொலை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்ததோடு அனைத்து வகையான மதவெறி மற்றும் வெறுப்புகளை அமெரிக்கர்கள் நிராகரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.