இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி அரைசதம் அடித்ததன் மூலம் இரண்டு வெவ்வேறு சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
விராட் கோஹ்லி:
டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்திருந்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியாவின் தொடக்க வீரர்களான, கே எல் ராகுல் 5, ரோஹித் சர்மா 27 என வெளியேற, சூர்யகுமாரும் 14 ரன்களில் பெவிலியன் திரும்ப இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் .
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால், விராட் கோஹ்லியும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து தங்களது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். இந்த அதிரடியான ஆட்டத்தில், விராட் கோஹ்லி 9 ரன்களை கடந்த போது டி20 உலக கோப்பை போட்டிகளில் 1100 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அடைந்தார்.
இதனை தொடர்ந்து, இந்த போட்டியில் இவர், 42 ரன்களை எடுத்த போது, டி20 போட்டிகளில் 4000 ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் தட்டி சென்றார். இவர் இந்த போட்டியில், 40 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 50 ரன்களை அடித்து அசத்தியுள்ளார். இதுவரை, விராட் கோஹ்லி சர்வதேச அளவில் 115 டி20 போட்டிகளில் விளையாடி 4008 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டி20 உலக கோப்பையில் இவர் பவுண்டரிகளில் சதம் அடித்துள்ளார். அதாவது, இதுவரை நடந்த டி20 உலக கோப்பை போட்டிகளில் விராட் கோஹ்லி 100 பவுண்டரிகளை அடித்துள்ளார் என்பதும் கவனிக்க தக்கது.