சர்வதேச இந்திய அணியானது, ஆசிய கோப்பை தொடரில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில், சூப்பர் 4 சுற்று வரை முன்னேறி உள்ள இந்திய அணி நாளை (செப்டம்பர் 10) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோத இருந்த ஆசிய கோப்பையின் லீக் போட்டியானது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நாளை நடைபெற இருக்கும் போட்டி மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாக மாறியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில் குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக எப்போது தனது அதிரடியை காட்டும் விராட் கோலி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கு ஏற்றார் போல, விராட் கோலியும் நாளை போட்டி நடைபெற இருக்கும் ஆர். பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் (கொழும்பு) மைதானத்தில் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் 128*(119), 131(96), 110*(116) சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதன் தொடர்ச்சியாக நாளைய போட்டியிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலிக்காக ரசிகர்கள் செய்த அந்த செயல்…, வைரலாகும் வீடியோ உள்ளே!!