ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மூலம், RCB அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மூன்று வித மகத்தான சாதனையை படைக்க காத்திருக்கிறார்.
விராட் கோலி:
இதுவரை 15 சீசன்களை கடந்துள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரானது, தற்போது 16 வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இந்த 16வது சீசன் வரும் 31ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்க உள்ள நிலையில், RCB அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, மூன்று விதமான சாதனைகளை படைக்கவும் முறியடிக்கவும் தயாராகி வருகிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, ஐபிஎல்லில் RCB அணியுடன் இணைந்து 15 வருடங்களை கடந்துள்ள விராட் கோலி, அதிக ரன்களை எடுத்துள்ள வீரராக திகழ்கிறார். தற்போது வரை 223 போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 6624 ரன்களை எடுத்துள்ளார். இவர் எதிர்வரும் சீசனில் இன்னும் 376 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை அடைவார்.
இதனை தொடர்ந்து, ஐபிஎல்லில் அதிக சதம் அடித்தவர்களுக்கான பட்டியலில், கிறிஸ் கெய்ல் 6, விராட் கோலி 5 சதங்களுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர். இதில் கிறிஸ் கெய்ல் ஐபிஎல்லிருந்து, ஓய்வு பெற்ற நிலையில், விராட் கோலி வரும் ஐபிஎல்லில் மேலும் 2 சதங்கள் அடித்தால், கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்து விடுவார். மேலும், ஐபிஎல் 16 வது சீசனில், விராட் கோலி, இன்னும் 7 கேட்சுகள் பிடிக்கும் பட்சத்தில், ஐபிஎல் வரலாற்றில், 100 கேட்சுகளையும் பிடித்த 3வது பில்டராக வலம் வருவார். இதற்கு முன், சுரேஷ் ரெய்னா (109), கீரன் பொல்லார்ட் (103) கேட்சுகளை பிடித்துள்ளனர்.