இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வணிக வளாகங்கள் முதல் நடைபாதை கடை வரை அனைத்து இடங்களிலும் Gpay, Phonepe, Paytm உள்ளிட்ட UPI அட்டைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.2,000க்கும் மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இது தொடர்பான முழு விளக்கத்தையும் UPIயின் கட்டுப்பாட்டகம் NPCI வெளியிட்டுள்ளது. அதன்படி UPI செயலிகளின் வாலாட்டில் இருந்து ரூ.2,000க்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது 0.5 முதல் 1.1% வரை கட்டணம் வசூல் செய்யப்படும். உதாரணமாக வாலட் மூலம் எரிபொருள் நிலையங்களில் ரூ.2,000க்கு மேல் பரிவர்த்தனை செய்தல் 0.5 சதவீதம் கட்டணம் வசூல் செய்யப்படும்.
3 மகத்தான சாதனைக்கு தயாராகும் விராட் கோலி…, ஐபிஎல் மூலம் வரலாறு படைப்பாரா??
அதேபோல் கல்வி, விவசாயம், காப்பீடு, ரயில்வேதுறை உள்ளிட்ட பல பரிவர்த்தனைகளின் போதும் குறிப்பிட்ட கட்டணம் வாலாட்டில் இருந்து பெறப்படும். ஆனால் வங்கி கணக்கு மூலம் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மேலும் இந்த கட்டண நியாயம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறை வர உள்ளது.