இந்திய கேப்டன் விராட் கோலி தனது பிறந்தநாளில் தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவவிற்காக முதல் முறையாக கேக் செய்ததாக கூறினார்.
மனைவிவியின் பிறந்த நாள்
இந்த கொரோனா ஊரடங்கு பல பிரபலங்களை தங்கள் துறையைத் தாண்டி மற்ற வேளைகளிலும் ஈடுபாடு கொள்ள வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது விராட் கோலியும் களம் இறங்கியுள்ளார். வந்துவிட்டது ‘ப்ரீத்’ சீசன் 2 வெப் சீரிஸ்
தனது மனைவிவியின் பிறந்த நாளிற்காக தாமே கேக் செய்ததாக விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
பிறந்தநாள் பரிசு
பி.சி.சி.ஐ ட்விட்டர் தளத்தில் ‘ஓபன் நெட்ஸ் வித் மயங்க்’ அரட்டை நிகழ்ச்சியில் சக அணியின் சக வீரர் மயங்க் அகர்வாலுடன் பேசிய கோஹ்லி சில கேள்விகளுக்கு பதிலளிப்பதைக் காண முடிந்தது. “உங்களுக்கு பிடித்த தனிமைப்படுத்தப்பட்ட கதை என்ன,” மாயங்க் கோலியிடம் கேட்டார்.
அதற்க்கு கோலி “அனுஷ்காவின் பிறந்தநாளில் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கேக்கை செய்தேன் இது எனக்கு ஒரு சிறந்த நினைவாக இருக்கும், ஏனென்றால் நான் இதற்கு முன்பு செய்ததில்லை என தெரிவித்தார்.
ஒரே இடத்தில்
நாங்கள் திருமணம் செய்து கொண்டதிலிருந்து ஒரே இடத்தில் மிக அதிக நேரம் ஒன்றாகக் கழித்தது அன்றுதான். நாங்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருந்ததில்லை.
மேலும் இணைந்து நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பாக இதை கருதுகிறோம். விசித்திரமான காலங்களில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம், என்று அவர் கூறினார்.