ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் – அமைச்சர் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்து உள்ளார். இன்று காலை இத்திட்டத்தை முதல்வர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

இலவச முகக்கவசம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் புதிய முன்னெச்சரிக்கை இன்றி முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வதும் காரணமாக உள்ளது. போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பொதுமக்களும் தரமில்லாத முகக்கவசங்களை வாங்கி அணிகின்றனர். எனவே தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் துணியால் தயாரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்து பயன்படுத்தக்கூடிய தலா 2 முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Minister Kamaraj
Minister Kamaraj

அதன்படி தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். இதைப் பெறுவதற்கான டோக்கன் வரும் ஆகஸ்ட் 1,2,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அவரவர் வீடுகளுக்கேச் சென்று வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here