வனிதா பீட்டர் பால், திருமணம் குறித்து youtube பர் சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயன் அவதூறு பேசி இருந்த நிலையில், தற்போது சூர்யா தேவி புகாரின் பேரில் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிரடி கைது:
தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகியான வனிதா விஜயகுமார் கடந்தாண்டு, பீட்டர் பால் என்பவரை 3ம் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து பிரபல யூட்யூபர் சூர்யா தேவி மற்றும் விஜய் டிவி காமெடியன் நாஞ்சில் விஜயன் ஆகியோர் அவதூறாக பேசியிருந்தனர். இதுகுறித்து வனிதா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்பிறகு, நண்பர்களாக இருந்த youtubeபர் சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயன் ஆகிய இருவரும் சண்டை போட்டு எதிரெதிர் துருவங்களாக மாறினார். அதாவது நாஞ்சில் விஜயன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக, சூர்யா தேவி போலீசில் புகார் செய்தார்.
சினிமாவில் மட்டுமல்ல.., அதிலும் முழுக்க போட்ட உதயநிதி ஸ்டாலின்.. ரெட் ஜெயன் மூவிஸ் அதிரடி முடிவு!!
இந்த புகாரின் அடிப்படையில் தற்போது, நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.