பாக்கியா கொடுத்த அடியால் திணறி போன கோபி.,, கொந்தளிக்கும் ராதிகா.,, அனல்பறக்கும் எபிசோட்!!

0
பாக்கியா கொடுத்த அடியால் திணறி போன கோபி.,, கொந்தளிக்கும் ராதிகா.,, அனல்பறக்கும் எபிசோட்!!

பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா தினம் தினம் செய்யும் டார்ச்சரால் கோபி தனக்கு தானே புலம்ப ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமி:

இன்றைய எபிசோடில், இந்த வீட்ல கோபினு யாரும் இல்லை என சொல்லி போஸ்ட்மேனை திருப்பி அனுப்பி விட்டார் ராமமூர்த்தி. இப்போது வீட்டை விட்டு வெளியே வந்த போஸ்ட் மேனை கோபி பார்த்துவிட்டு என் பெயரில் ஏதாவது லெட்டர் வந்துச்சா? என கேட்க, ஆமாம் வந்திருக்கு ஆனா உங்க வீட்ல கோபி என்ற பெயரில் யாரும் இல்லைன்னு சொல்லிட்டாங்க என போஸ்ட் மென் சொல்ல, கோபி லெட்டரை வாங்கி கொண்டு சென்றுவிட்டார். வீட்டுக்கு போய் நடந்ததை ராதிகாவிடம் கூற, அவர் நாம இந்த வீட்டுக்கு அட்ரஸ் ப்ரூப் வாங்கணும் அதுக்கு உங்க வீட்ல உள்ள ரேஷன் கார்டுல உங்க பெயரை நீக்கணும் என்று சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து கோபி பாக்யாவுக்கு போன் செய்து, ஏன் பெயரில் வந்த லெட்டரை திரும்பி அனுப்புன, அவளோ கொழுப்பா என கேட்க, அதற்கு பாக்கியா ஆளு இல்லாம அந்த லெட்டரை எப்படி வாங்க முடியும் என பதில் கூறுகிறார். மேலும் எனக்கு நம்ம வீட்டு ரேஷன் கார்டு வேணும், என்னோட பெயரை நீக்கணும் என கோபி கேட்க, நான் சமைக்கிற வேலை தான் பாக்குறேன் எனக்கு இதுலா தெரியாது , ரேஷன் கார்டு வேணும்னா மாமாட்ட கேட்டுக்கோங்க என பதில் அடி கொடுத்து விட்டு போனை வைத்து விடுகிறார்.

மறுபக்கம் ராதிகா ஏன் இவங்களுக்கு போன் பண்ணி சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க, போய் உங்க அம்மா அப்பாட்ட கேக்கவேண்டிதான, என நீங்க பண்றது எனக்கு பிடிக்கவில்லை என கடுமையாக சத்தம் போட்டு விட்டு சென்று விட்டார். இதையடுத்து கோபி இவதான போன் பண்ணி கேட்க சொன்னா, இப்போ என்ன இப்படி சொல்லிட்டு போற என மீண்டும் புலம்ப ஆரம்பித்துவிட்டார். மற்றொரு பக்கம் எழில், அமிர்தா வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், அவருடைய அம்மா அப்பா, அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்க போறத வீட்ல சொல்லி சம்மதம் வாங்கிட்டியா, என கேட்க அதெல்லாம் வாங்கிறலாம்மா நான் அமிர்தவ தான் கல்யாணம் பண்ணிப்பேன் என உறுதி அளிக்கிறார் எழில் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here