இந்த சீன் எதுக்கு.. பாக்கியலட்சுமி சீரியல் மீது போலீசில் புகார் – விஜய் டிவிக்கு வந்த புதிய தலைவலி!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியினால், தற்போது புது சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புது சிக்கல் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல ரசிகர்களின் பேவரைட் ஷோவாக மாறியுள்ளது. சமீபத்தில், இந்த சீரியலில் இனியா படிக்கும் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர், இனியாவின் தோழியிடம் தவறாக நடந்து கொண்டதால், அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வது போன்ற காட்சிகள் இந்த தொடரில் இடம்பெற்றது. இது குறித்து, சமூக ஆர்வலர் முகமது கோஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

அதாவது, இது போன்ற காட்சிகளை இடம்பெற செய்து பள்ளி மாணவர்களை வாழ்க்கையை இந்த சீரியல் கேள்வி குறியாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கும் காட்சிகளை இந்த சீரியலில் இடம் பெற செய்திருக்கலாம், ஆனால் இப்படி ஒரு காட்சியை வைத்து, மாணவர்களை திசை திருப்புகிறார்கள் என கூறி அந்த காட்சியை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதனால், விஜய் டிவிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here