ரசிகர்களுக்கு விஜய் டிவி சொன்ன குட் நியூஸ் – இனி சீரியல்கள் எல்லாம் இப்படி தானாம்!!

0

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு சிறப்பம்சமாக ஒரு புதிய அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

விஜய் டிவி

விஜய் டிவி ஆரம்பத்தில் இருந்தே பல ஹிட் சீரியல்களை கொடுத்து வருகிறது. நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து சீரியல்கள் வரை மக்களின் ஆல் டைம் பேவோரைட் தான். மேலும் தற்போது புதிய கான்செப்ட்டாக பல காதல் கதைகளை முன்னிறுத்தி சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே, ராஜபார்வை, அன்புடன் குஷி, செந்தூரப்பூவே போன்ற பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நிலைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சீரியல்கள் அனைத்திலும் நேரமும் ஒளிபரப்பும் நாட்களும் குறைக்கப்பட்டிருந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள தளர்வுகளால் சீரியல்கள் மீண்டும் புதிய அத்தியாயத்தில் தொடங்கியுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்ட மதிய நேர சீரியல்கள் சனி கிழமையும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தகவலை கேட்ட பலரும் உற்சாகத்தில் உள்ளனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here