ஐபிஎஸ் கனவை நிறைவேற்றும் சந்தியா?? ராஜா ராணியில் நடந்த மர்ம நிகழ்வுகள்! சிக்கிக்கொண்டாரா அர்ச்சனா!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சந்தியா போலீஸ் டிரஸில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் சந்தியா மீது திருட்டு பழியை போட்டு விட்டு நிம்மதியாக இருக்கிறார் அர்ச்சனா. இதனை கண்டுபிடித்த சரவணன் அர்ச்சனாவை வந்து மிரட்டுகிறார். ஆனாலும் அர்ச்சனா திருந்தாமல் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டுள்ளார்.

இதெல்லாம் தெரியாமல் சிவகாமி சந்தியாவை மட்டுமே குற்றம் சொல்லி வருகிறார். மேலும் இந்த வீட்டை விட்டு சந்தியா எப்படியும் வெளியே தான் போக போகிறார் என்று அனைவர் முன்பும் சொல்ல சந்தியாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மேலும் சரவணனிடம் வாழ்ந்து ஆக வேண்டும் என்றும் தனக்கு எல்லா சமயத்திலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார் சந்தியா. ஆனால் சிவகாமி சந்தியாவை துரத்தி விட்டுவிட்டு வேறு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார்.

இப்படி இருக்க தற்போது சந்தியா போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இது எப்படி சாத்தியம் என்றும் பலரும் குழம்பி போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here