விஷால் நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் உருவான சண்டக்கோழி படத்தில் நடிக்க வேண்டியது விஜய் தான், என இப்படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பேட்டி:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி, தனது தொடர் தோல்விகளுக்கு பின் விஷால் நடிப்பில் உருவான சண்டக்கோழி என்ற வெற்றி படத்தை கொடுத்தார். இவர் இந்த படம் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகளை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, நான் படம் எடுக்க ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே என் சம்பளத்தை ஒரு கோடி வரை உயர்த்தினேன்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்போது பட விநியோகிஸ்தர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்க படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று சம்பளத்தை இவ்வளவு வைத்திருக்கிறாய் என்று நக்கலாக கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக சண்டக்கோழி படம் அமைந்தது.
குக் வித் கோமாளியை விட்டு விலகிய மணிமேகலை நிலைமை இதுதான்., அவரே போட்ட பதிவு!!
கிட்டத்தட்ட 285 நாட்கள் வரை படம் ஓடியது. ஆனால், இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால், இப்படத்தில் நடிக்க வேண்டியது நடிகர் விஜய் தான். ஆனால் அவருக்கு படத்தின் கதை சுத்தமாக பிடிக்கவில்லை எனக் கூறியதால், இதில் விஷாலை நடிக்க வைத்தேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட பலரும் விஜய் இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே? என வருத்தப்பட்டு வருகின்றனர்.