தலைநகரை மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல் மற்றும் நிழற்குடை அமைத்தல் போன்ற முக்கிய பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு :
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், சமீப காலமாக மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலைகள் சீரமைக்கப்பட்டு, பணிகள் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது இனி வெயில் காலம் ஆரம்பிக்க உள்ளதால், பொதுமக்கள் வசதிக்காக சென்னையின் முக்கிய இடங்களில் 844 நிழற் குடைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது குறித்து ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் மேயர் தலைமையில் நடந்த போது இது குறித்து பேசிய அவர், முதல்வரின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னையின் 6 மண்டலங்களில் சுமார் 62.73 கிலோ மீட்டர் தூரத்துக்கு 322 க்கு மேற்பட்ட சாலை அமைக்கும் பணிக்காக, ரூபாய் 43.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
whatsapp பயனர்களே., தெரியாத நம்பர்ல இருந்து Call வருதா? இந்த அப்டேட் உங்களுக்குத்தான்!!
கிட்டத்தட்ட, சென்னையை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைக்கவும், பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது சென்னைக்கு குவியும் இந்த வளர்ச்சி திட்ட பணிகளால், இப்பகுதி மக்கள் உச்சகட்ட பயிற்சியில் இருந்து வருகின்றனர்.