நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் தன் மருமகள் மற்றும் பேரன் குறித்த சுவாரஸ்ய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஷோபா நெகிழ்ச்சி :
நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், தன் மகன் குறித்த முக்கியமான நிகழ்வுகளை பேட்டிகளில் தெரிவிப்பது உண்டு. இவர்களோடு சேர்த்து தன் மருமகள் மற்றும் பேர குழந்தைகள் குறித்த விஷயங்களையும், இவர் சில நேரங்களில் உருக்கத்துடன் பேசுவார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், உங்க மருமகள் சங்கீதாவுக்கு என்ன சாப்பாடு மிகவும் பிடிக்கும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அவர் உங்க வீட்டுக்கு வந்தா நீங்க என்ன சமைச்சு கொடுப்பீங்க? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஷோபா, இந்த விஷயத்தில் என் மருமகள் சொல்வது தான் முடிவு. அவரும் குழந்தைகளும் என்ன கேட்கிறார்களோ? அதை நான் சமைத்துக் கொடுத்து விடுவேன். இந்த விஷயத்தில் அவர் பெரும்பாலும், என்ன சமைக்க வேண்டும் என்பதை தன்னிச்சையாக முடிவெடுக்க மாட்டார்.
குழந்தைகளிடம் கேட்டுவிட்டு தான் சொல்வார். அதுவும் குறிப்பாக என் பேரன் சஞ்சய்க்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அதை அவர் விரும்பி சாப்பிடுவார். எங்க வீட்டுக்கு வந்தா அவங்களுக்கு பிரியாணி செஞ்சு கொடுப்பதுதான் என் வேலை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.