தமிழர்களின் கலாச்சார பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி தற்போது இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு பொருளாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் என ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த பொருட்களை வாங்க மக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பெறுவதற்கு தேதி மற்றும் நேரம் குறிக்கப்பட்ட டோக்கன் வீடுதோறும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த டோக்கன் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கி இன்றுடன் (08.01.2023) முடிவடைய உள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் டோக்கன் பெற்ற மக்கள் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரங்களில் கடைக்கு செல்ல தமிழக அரசு தெரிவித்துள்ளது.