இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் அதிரடியான சதங்களை குவித்து வரும் இளம் வீரரை ஏன் உலக கோப்பைக்கான அணியில் எடுக்க வில்லை என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்திய இளம் வீரர்:
இந்தியாவின் உள்ளூர் தொடர்களின் ஒன்றான விஜய் ஹசாரே டிராபி இன்று முதல் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட 38 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வகையில், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக ரயில்வேஸ் அணி போட்டியிட்டது. இந்த போட்டியில், ரயில்வேஸ் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய மகாராஷ்டிரா அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியான பேட்டிங்கால் 38.2 ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றனர். இதில், ருதுராஜ் கெய்க்வாட் 8 பவுண்டரி, 7 சிக்ஸர் என விளாசி 124 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
T20 WC 2022: இந்தியா படைத்த மோசமான சாதனை…, இது கூட ஒரு ரெக்கார்ட்டா??
இவர், இந்த போட்டியில் மட்டும் இல்லாமல், இதற்கு முந்தைய தொடர்களிலும் 136, 154*, 124, 168 என அதிரடியான சதங்களை அடித்து அசத்தியுள்ளார். மேலும், இவர் ஒரு தொடக்க வீரர் ஆவார். இவர் போன்ற வீரர்களுக்கெல்லாம் பிசிசிஐ ஏன் சர்வதேச அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் வர தொடங்கி உள்ளன.