விஜய் ஹசாரே டிராபியில் தொடரும் இளம் வீரர்களின் சாதனை…, இந்திய அணியில் இடம் பிடிக்க போவது எப்போது??

0
விஜய் ஹசாரே டிராபியில் தொடரும் இளம் வீரர்களின் சாதனை..., இந்திய அணியில் இடம் பிடிக்க போவது எப்போது??
விஜய் ஹசாரே டிராபியில் தொடரும் இளம் வீரர்களின் சாதனை..., இந்திய அணியில் இடம் பிடிக்க போவது எப்போது??

விஜய் ஹசாரே டிராபியின் ருதுராஜ் கெய்க்வாட்டை தொடர்ந்து, அசாம் வீரரும் அதிரடியான சிக்ஸர்களை விளாசி சதத்தை அடித்துள்ளார்.

விஜய் ஹசாரே டிராபி:

விஜய் ஹசாரே டிராபியில், நேற்று காலிறுதி போட்டிகள் நடைபெற்றன. இந்த காலிறுதியில் உத்தரப்பிரதேசம் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் தொடர்ந்து 7 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்திருந்தார். மேலும், 159 பந்துகளில் 10 பவுண்டரி, 16 சிக்ஸர் என 220 ரன்கள் எதிரணியின் பந்து வீச்சை அடித்து தும்சம் செய்திருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால், இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவரை போலவே, இந்த டிராபின் மற்றொரு காலிறுதி போட்டியில், அசாம் வீரர் ஒருவர் அதிரடி காட்டியுள்ளார். அதாவது, நேற்று ஜம்மு காஷ்மீருக்கு எதிராக அசாம் அணி மோதியது. இதில், 350 என்ற இலக்கை துரத்திய அசாம் அணியில், ரிஷவ் தாஸ் மற்றும் ரியான் பராக் ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 277 ரன்கள் குவித்துள்ளனர்.

ஒரு வெற்றிக்காக 700 கைதிகள் விடுவிப்பு…, உலக கோப்பையில் தொடரும் சுவாரசியமான சம்பவம்!!

இவர்களில், ரியான் பராக் 116 பந்தில், 12 பவுண்டரி, 12 சிக்ஸர் உட்பட 174 ரன்களை அடித்து அசத்தியுள்ளார். இந்த டிராபியில், தமிழ்நாட்டின் ஜெகதீசன், சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இதனால், உள்ளூர் ரசிகர்கள் பலர், இவர்களை போன்ற திறமையான இளம் வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்ய கூறி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here