FIFA உலக கோப்பை தொடரில், சவுதி அரேபியாவை தொடர்ந்து, ஈரான் அணியும் தங்களது வெற்றியை கொண்டாடும் விதத்தில், வியக்கத்தக்க வகையில் ஒரு செயலை செய்துள்ளது.
FIFA உலக கோப்பை:
கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலக கோப்பை தொடரில் ஒரு அணி வெற்றி பெறுவதை அந்த நாட்டை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இந்த உலக கோப்பையில், அர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் போட்டியை சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஒரு நாள் அரசு விடுமுறை அளித்து சவுதி அரேபியா இந்த வெற்றியை கொண்டாடியது. ஒரு போட்டி வெற்றி பெற்றதற்கு அரசு விடுமுறையா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருந்தனர். தற்போது, இதையும் தாண்டி, ஈரான் அரசு ஒன்று செய்துள்ளது. அதாவது, வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியை ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
ஒரு கோலால் மாறிய ஆட்டம்…, அடுத்த சுற்றுக்கு முன்னேறி பிரேசில் அபாரம்!!
இந்த வெற்றியை கொண்டாடிய ஈரான் அரசு, 700க்கும் மேற்பட்ட கைதிகளை வெவ்வேறு சிறைகளில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலானது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும், ஈரான் அணி அடுத்தாக அமெரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இதில், ஈரான் அணி வென்றால் என்ன செய்யும் என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே தற்போது அதிகரித்து உள்ளது.