நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பிறந்தநாள் மற்றும் சதய விழாவில் விஜய் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சி ஓபன் டாக்:
நடிகர் விஜய், இயக்குனர் வம்சி இயக்கத்தில், வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அண்மையில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சி தனது 80-வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். இதையடுத்து, எஸ்.ஏ.சிக்கு அண்மையில் திருக்கடையூர் கோயிலில் சதாபிஷேக விழா நடைபெற்றது.
ஆனால் இந்த விழாவில், நடிகர் விஜய் கலந்து கொள்ளாதது குறித்த அவர் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் பெற்றோரை கண்டு கொள்வதே இல்லை என்றும் குற்றம் சாட்டினர். தற்போது இதற்கு பதில் அளித்துள்ள எஸ் ஏ சந்திரசேகர், நடிகர் விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதால் அவர் பொது இடங்களுக்கு எல்லாம் வர முடியாது.
இதுபோக அவர் தற்போது ஹைதராபாத் ஷூட்டிங்கில் இருக்கிறார் என்றும், ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சின்ன விஷயங்கள் தான் எங்களுக்குள்ளும் நடக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து, விஜய் குறித்த தேவையற்ற வதந்திகளுக்கு அவரது தந்தையே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்