தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக வலம் வரும் விஜய், அனைவரின் இயக்கத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் கௌதம் திரைப்படத்தில் மட்டும் நடித்தில்லை அதற்கான காரணம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன்
தமிழ் சினிமாவில் ரொமான்டிக் டைரக்டர் என்றால் கௌதம் வாசுதேவ் மேனன் தான். பலர் மனதில் இருக்கும் காதல்களை வெளிக்கொணர்ந்து வருவதாக இவரின் கதையம்சங்கள் அனைத்தும் அமைந்திருக்கும். ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘வாரணம் ஆயிரம்’, ‘காக்க காக்க’ என பல காவிய கதைகள் இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்லலாம். மிகவும் எதார்த்தமான ரொமான்டிக் சீன் உடன் காட்சிகள் அனைத்தும் அமைந்திருக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவரது படத்தில் அதிகம் தேர்வு செய்வது என்னவோ சூர்யா, சிம்புவாக தான் இருந்தனர். இது வரையில் விஜயை வைத்து கௌதம் எந்த படத்தையும் இயக்கியது கிடையாது. இது மக்கள் பலருக்கும் இருக்கும் சந்தேகம் என்றே சொல்லலாம். ஏனெனில் கௌதம் பட கதைகள் அனைத்தும் ஒரு ரொமான்டிக் ரோல் தான் அதிகம் இருக்கும். ஒரு சாக்லேட் பாய், பிலே பாய் போன்றவர்களையே அதிகம் தேர்ந்தெடுத்திருந்தார் கௌதம்.
கருப்பு நிற உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – வைரலாகும் புகைப்படம்!!
அப்படி பார்த்தால் விஜய் வைத்து கதை எடுப்பதற்காக எந்த சுழலும் ஏற்பட்டிருக்காது. அதாவது, விஜய் இதுவரையிலும் ஒரு ஆக்சன், கமர்சியல் போன்ற திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். அப்படி இருக்க கௌதம் படத்திற்கும், விஜய்க்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. இது தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.