இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஒரு நாளில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
மத்திய சுகாதாரத்துறை என்னதான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு கடும் உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் போலீசார் மற்றும் மத்திய சுகாதாரத்துறையினர் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றாத நபர்களை கடுமையாக கண்டித்து வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிவது மாற்று சமூக இடைவெளியை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 47,262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை சுமார் 1,17,34,058 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் இந்தியாவில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கொரோனவால் மொத்தம் 1,60,441 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் கொரோனாவில் இருந்து 23,907 பேர் குணமடைந்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,05,160 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 3,68,457 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் இப்படி தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தால் மீண்டும் நாட்டில் ஒரு வருடம் ஊரடங்கு ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் அச்சமடைந்த வருகின்றனர்.