கோலிவுட்டின் டாப் ஜோடிகளாக இருப்பவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சமந்தாவுடன் நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு விக்னேஷ் சிவன் அதிகம் நெருக்கம் காட்டியதால் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனிடம் சின்ன மனஸ்தாபம் உண்டாகியுள்ளது என்று பேசப்பட்டது.
அதற்கு ஏற்றார் போல காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தனது பட ஹீரோ விஜய் சேதுபதி உடன் விக்னேஷ் சிவன் சென்று பட ப்ரமோஷன்களில் கலந்து கொண்டார். இதனை பார்த்த பலர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இடையே விரிசல் என வதந்திகளை கிளப்பினர். தற்போது அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது ‘என் வாழ்வில் வலிமையின் தூணாக இருந்ததற்கு நன்றி! நீ எனக்காக எவ்வளவு இருக்கிறாய்!!! ஒவ்வொரு முறையும் நீ எனக்கு ஆதரவாக நின்ற விதம்.. என்னை முக்கிய முடிவுகளை எடுக்க வைத்தது மற்றும் எனக்கு எவ்வளவு துணையாக இருந்தாய்.. இவை அனைத்தும் என்னையும் முழுமைப்படுத்துகிறது! உன்னை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியது எனக்கு பெருமை தங்கமே’ என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்