இந்த ஆண்டு சினிமா துறை ஈடுசெய்ய முடியாத பல முக்கிய நடிகர்கள், இயக்குனர்களை இழந்துள்ளது. இந்நிலையில் தற்போது விஜயின் வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான பாபு சிவன் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியாக்கியுள்ளது.
பாபுசிவன்:
2009 இல் வெளியான விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை இயக்கியவர் தான் பாபுசிவன். விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருப்பார். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் தரணி இயக்கத்தில் வெளியான குருவி படத்தில் வசனம் எழுதியவர் இவரே. இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி சீரியலை இயக்கி வந்தார். இந்நிலையில் 54 வயதான இவர் கடந்த ஞாயற்றுக் கிழமையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழந்ததாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைகள் அளித்தும் பயனின்றி நேற்று உயிரிழந்தார். இது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கொரோனா காரணமாக நேற்று முன்தினம் கலைஞர் டிவியின் ஜெனரல் மேனேஜர் புளோரன்ட் பெரேரா உயிரிழந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் தற்போது பாபு சிவனின் மரணம் திரையுலகினரை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.