மிக் ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இன்னும் சில இடங்களில் தண்ணீர் வெளியேற்ற படாமல் இருந்து வருகிறது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஷால் வீட்டில் வெள்ளம் புகுந்ததால், அவர் 4000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் என்ன ஆயிற்று என்று அரசுக்கு எதிராக பேசியிருந்தார்.
இந்நிலையில் விஷாலின் வீடியோவுக்கு முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது நடிகர் விஷால் அவர்களே மழையில பயாஸ்கோப் படம் ஓட்டுறீங்களா? உங்களுக்கு கை, கால் செயலிழந்து விட்டதா? அல்லது மூளை செயலிழந்து விட்டதா?., நீங்கள் எப்போது இந்த மண்ணுக்கும் அரசியலுக்கு ஏதிராகவே இருக்கிறீர்கள். உங்களை போல் நிறைய பிரபலங்கள் வெள்ளத்தால் அவதிப்படும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். நீங்கள் உதவி செய்யலனாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள். பாதிக்கப்பட்ட மக்களை தமிழக அரசு தாய் போல் காத்து வருகிறது என்று விளாசியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
புரோ கபடி லீக்: சமநிலையில் முடிந்த ஆட்டம்…, 3வது இடத்தை தக்க வைத்த பெங்கால்!!