மிக்ஜாம் புயல் நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தமிழக முதல்வர்…, அதிரடி அறிவிப்பு!!

0
மிக்ஜாம் புயல் நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தமிழக முதல்வர்..., அதிரடி அறிவிப்பு!!
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயலாக உருவெடுத்து, தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தடம் புரட்டியது. இதனால், இந்த 4 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் நீடித்த வண்ணம் உள்ளன. மேலும், அரசு சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் பலர் தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.
இதில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் “மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பில் இருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்” என்று கூறி, அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here