‘சொந்த வாழ்க்கைய வியாபாரம் பண்றது என்ன பொழப்போ’ – வனிதாவை வறுத்தெடுத்த கஸ்தூரி!!

1

பீட்டர் பாலை பிரிந்தது பற்றி வனிதா விஜயகுமார் தனது யூடுப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘சொந்த வாழ்க்கைய வியாபாரம் பண்றது என்ன பொழப்போ’ என கஸ்தூரி அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே வனிதாவின் திருமணத்தின் போதே இருவருக்கும் இடையில் மோதல் வெடித்த நிலையில், கஸ்தூரியின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வனிதா – கஸ்தூரி:

தமிழ் திரையுலக பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் தான் வனிதா. இவர் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற பல சண்டைகளுக்கு காரணமாக இருந்த அவர் பின்னர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட அவர் டைட்டிலையும் கைப்பற்றி அசத்தினார்.

vanitha peter paul
vanitha peter paul

வனிதாவிற்கு 19வது வயதில் முதல்முதலில் ஆகாஷ் எனும் நடிகருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பையன் பிறந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர். பின்னர் 2வதாக ஆனந்த் எனும் தொழிலதிபரை மணந்த வனிதா அவரிடமும் இருந்து சில நாட்களில் விவாகரத்து பெற்றார். வனிதாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், தனது யூடுப் சமையல் நிகழ்ச்சிகளுக்கு துணையாக இருந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பீட்டர் பால் தனது முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் பலரும் வனிதாவை கடுமையாக விமர்சித்தனர். இது எதையும் கண்டுகொள்ளாத வனிதா பீட்டர் பாலுடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீட்டர் பாலின் பிறந்தநாளை கொண்டாட தனது இரு மகள்களுடன் வனிதா குடுமபத்துடன் கோவா சென்றுள்ளார்.

அங்கு அவர்களுடன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. ஆனால் கோவாவில் ஏற்பட்ட பிரச்சனைகளால் பீட்டர் பாலை வனிதா அடித்து துரத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக வனிதா வெளியிட்ட வீடியோவில், கோவாவில் குடித்து விட்டு பிரச்சனை செய்த பீட்டர் பாலையும், பயத்தில் இருந்த இரு மகள்களையும் நடு இரவில் தனியாக காரில் அழைத்து வந்ததாக கண்கலங்கியபடி தெரிவித்தார்.

அவரது வீடியோ வைரலாக பரவிய நிலையில், அது பற்றி ரசிகர் ஒருவர் கஸ்தூரியிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். அதற்கு, இது சொல்வதெல்லாம் பொய் ரகம் என கூறினார். மேலும் அந்த கண்ணீர் வீடீயோவை நான் பார்த்தேன். ‘சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ, புரியலடா சாமி. எல்லாம் பொய்’ என கூறினார். இடைல விளம்பரம் வேற வருது என வறுத்தெடுத்துள்ளார். இந்த வீடியோ மூலம் நன்றாக சம்பாரிப்பார் என கண்டபடி விளாசியுள்ளார். அவருக்கு விரைவில் வனிதா பதில் அளிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

1 COMMENT

  1. அடுத்தவங்க வாழ்க்கையில இவ்வளவு தூரம் உள்ளே நுழையும் உங்க பொழப்பவிட அவங்க பொழப்பு தரமானதுதான். போய் உங்க சொந்த வேலைய பாருங்கம்மா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here