நடிகை வனிதா இது உங்களுடைய ஷோ இல்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
வனிதா – பீட்டர்பால் திருமணம் குறித்து புகார்..!
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சனி கிழமை பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத் திருமணத்தை அடுத்து பீட்டர் பால் அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் ஒரு பெண் பித்தர் என்றும் குடிகாரர் என்றும் குற்றசாட்டை வைத்துள்ளார்.
இது குறித்து வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்தபோது சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் பணத்திற்காக புகார் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டர் பதிவு..!
இந்த செய்தி அறிந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட்டரில் அவரது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் பீட்டர்பாலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் விவாகரத்தாகவில்லை. வனிதா – பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை என்றும் திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவானது அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.
வனிதா விஜயகுமார் பதில்..!
இதற்கு வனிதா கூறியதாவது, தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம்.
மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.