கையில் சரக்குடன் மாலத்தீவில் வனிதா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

சர்ச்சைக்கு பேர் போனவர் பிக்பாஸ் வனிதா. இவர் செய்யும் எல்லா விஷயங்களும் சமூகவலைதளத்தில் எப்போதும் பேசும்பொருளாகவே காணப்படும். தற்போது மாலத்தீவில் இவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

வனிதா மாலத்தீவு புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் வனிதா. பின்பு அதே தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். தொடர்ந்து சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லியில் 144 தடை உத்தரவு!!

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் அவரது யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்க உதவியாக வந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இத்திருமணத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கேளிக்கைக்குள்ளானது. பின்பு கணவருடன் கோவா சென்ற இவர் அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக கணவரை விட்டு பிரிந்து விட்டதாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது மாலத்தீவில் சுற்றுலா சென்றிருக்கும் வனிதா அங்கு எடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படத்தை கையில் ஒரு சரக்கு ஊற்றிய க்ளாசுடன் மல்லாக்க படுத்தவண்ணம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம போதையா என்றும் யாருடன் சென்றிருக்கிறீர்கள் என்றும் சமூகவலைதளங்களில் கேள்விகேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here