சின்ன திரை மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்து இன்று அனைவர் மத்தியிலும் பெரும் பேரினை சமர்ப்பித்து வைத்திருப்பவர் தான் நடிகை வாணி போஜன். தற்போது புதிதாக அவர் நடிகர் பரத்துடன் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாணி போஜன்
சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்தவர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் தற்போது ரசிகர்கள் அனைவரின் கனவு கன்னியாக இருப்பவர் தான், நடிகை வாணி போஜன். இவர் கடந்த ஆண்டு வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
அந்த படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்று கூறினாலும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பினை பெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரப்போவது யார்?? வைரலாகும் கருத்துக்கணிப்பு!!
அதனை தொடர்ந்து தற்போது அனைவரின் விருப்பமான நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன் “ட்ரிப்பிள்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்தார். இவரை அனைவரும் சின்னத்திரை நயந்தாரா என்று அழைப்பது தான் வழக்கம்.
நயந்தாரா தனது டார்கெட் என்று சில பேட்டிகளில் வாணி போஜனே கூறியுள்ளார். இப்படியான சூழலில் வாணி போஜன் தற்போது நடிகர் பரத் நடிக்கவிருக்கும் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளாராம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது மட்டும் அல்லாமல் அவர் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் சசிகுமார் ஆகியோருடனும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். பரத் நடிக்கும் படத்தில் வாணி போஜன் தான் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் நச்சரித்து தான் தயாரிப்புப் நிறுவனம் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.