தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரப்போவது யார்?? வைரலாகும் கருத்துக்கணிப்பு!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து கருத்து கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தொகுதி பங்கீடு குறித்த முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். தற்போது வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. தற்போது தான் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தேர்தல் நடைபெறும் பொழுதெல்லாம் கருத்து கணிப்பு நடத்தப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதில் யார் வெற்றி பெறுவர் என்பதையும் தெரிவித்து வருவார்கள். தற்போது அதன்படி இந்த முறையும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்த கருத்து கணிப்பை டைம்ஸ்னவ் மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து நடத்தியுள்ளனர். அதன்படி தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதை தற்போது வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி இந்த தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான ஆட்சியை பிடிக்கும் என்பது போல் தெரிகிறது.

அரசு பேருந்துகளில் இனி பெண்களுக்கு கட்டணம் கிடையாது – முதல்வர் அதிரடி!!

மேலும் இந்த தேர்தலில் திமுக கட்சி 158 தொகுதிகளையும், அதிமுக கட்சி 65 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அறிவித்தனர். இவர்களை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் 5 தொகுதிகளையும், அமமுக 3 தொகுதிகளையும் இதர கட்சிகள் 3 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த கருத்துக்கணிப்பு முடிவினால் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here