தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்திலுக்கு பிறகு நகைச்சுவை நடிகராக ரசிகர்களால் கொண்டாப்பட்ட பிரபலம் தான் வைகை புயல் வடிவேலு. அடைமொழிக்கு ஏற்றார் போல் ஓடும் வைகை மாதிரி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து எந்த காமெடி நடிகரும் நெருங்க முடியாத அளவுக்கு புயல் போல் ஜொலித்து கொண்டிருந்தார். ஏன், அவரது காலத்தில் அவர் இல்லாமல் படங்கள் வெளியானதில்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த அளவுக்கு ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தினார். அதன் பின்னர் கொஞ்சம் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது “மாமன்னன்” படத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் நடித்து அனைவரிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் “மாமன்னன்” நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது வடிவேலு தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.