நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு உத்தரவு மே 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே மாதம் நடக்க இருந்த யுபிஎஸ்சி சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் செமஸ்டர் தேர்வுகள், பள்ளி இறுதித்தேர்வுகள் மற்றும் பல்வேறு அரசுத் தேர்வுகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே 31ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) அதிகாரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
தேர்வுக்கான மறுதேதி மே 20ம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்காக விண்ணப்பித்து உள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அடுத்த வாரம் விண்ணப்பிக்கப்பட இருந்த நிலையில் அந்த பணிகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |