நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்கள் உட்பட பிற நிறுவனங்கள் தங்களிடம் திறமையான ஊழியர்களை வைத்து கொண்டு மற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் UpGrad நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
நாட்டில் தற்போது பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக தங்களிடம் இருக்கும் திறமையான ஊழியர்களை மட்டும் வைத்து கொண்டு குறைந்த லாபம் தரும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர். அத்துடன் புதிய பணியாளர்களை பணி அமர்த்துதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொடஙகியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் குறிப்பாக Twitter, Microsoft உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதே போல் Amazon நிறுவனம் லாபம் தரும் ஊழியர்களை வைத்து கொண்டு மற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை UpGrad நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் பிற அலுவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வு .,, பள்ளிகள் இயங்குமா? எழுந்த பெரும் குழப்பம்!!
அதன்படி இந்நிறுவனத்தில் நவம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலகட்டத்திற்குள் சுமார் 1400 பணியாளர்களை பணி நியமனம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.