இந்திய ரயில்வே வாரியத்தில் தற்போதுள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று இந்திய ரயில்வேயின் செயல் இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
இந்திய ரயில்வே வாரியத்தில் மேற்பார்வையாளர் நிலையில் உள்ள 80,000 ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த பதவி உயர்வு மூலம் நிலை 7,8 மற்றும் 9-ல் உள்ள ஊழியர்கள் அனைவரும் குரூப் A நிலை அளவிற்கு தகுதியானவர்களாக மேம்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்திய ரயில்வே வாரியத்தில் காலியாக உள்ள பல பணியிடங்களுக்கான அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ரயில்வே வாரிய பணியாளர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளின் மூலம் நியமிக்கப்படுவார்கள். தற்போது இந்திய ரயில்வேயின் செயல் இயக்குனர் அமிதாப் ஷர்மா அவர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் நியமனம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு நிலவரப்படி அறிவிக்கப்பட்ட 35,281 பணிகளுக்கான தேர்வுகளும் பதவிநிலை வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளின் முடிவுகளை நிலை வாரியாக ரயில்வே வாரியம் வெளியிட உள்ளது. அதன்படி, வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் 35,281 பணிகளுக்கான காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.