தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் டிச.05ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் டிச.05ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் டிச.05ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாட இத்தினத்தன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக இம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர்

திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துபேட்டையில், ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழா தொடர்ந்து 14 நாட்கள் வரை நடைபெறும். 14 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு நிகழ்வானது மிகவும் பிரபலமான நிகழ்வு. இந்த சந்தனக்கூடு நிகழ்வை காண வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்வார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் மற்ற நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் இந்நிகழ்வை காண வருகை புரிவார்கள். அதனால் இத்தினத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள ஏதுவாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2023 மார்ச் மாதத்திற்குள் 35,000 பணியிடங்கள் நிரப்பப்படும் – ரயில்வே வாரியம் உறுதி!

தீபாவளியை முன்னிட்டு 10 நாட்கள் தொடர் விடுமுறை.., நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 5ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் பொருட்டு டிசம்பர் 10ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here