தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி முடிவடைந்த நிலையில் கடந்த மே 8ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 8.17 லட்சம் மாணவ மாணவியர்களில் என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடந்த முடிவடைந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்படும் என கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எனவே இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 24ம் தேதி மே முதல் வாரம் வரை நடைபெற்றது. நாளை மறுநாள் (மே 17) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட உள்ளதாக அறிவித்து விட்டு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்வித்துறை வெளியிடவில்லை. இதன் காரணமாக தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்து விட்டு நீட் தேர்வு உள்ளிட்ட காரணங்களால் மே 8ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடுவதில் கால தாமதம் ஆகுமோ? என பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.