‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ – முதற்கட்டமாக 6 லட்ச புகார்கள் கணினியில் ஏற்றம்!!

0

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மக்களிடம் புகார்களை பெற்ற ஸ்டாலின் தற்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பெயரில் தீர்வு காணவுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்:

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு பிரச்சாரத்தின் பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மக்களிடம் புகார்களை பெற்று அதற்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறி மக்களிடம் புகார்களை பெற்று வந்தார். தற்போது தமிழகத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் ஆட்சியமைத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பதவிக்கு வந்ததும் மக்களுக்கு பயனடையும் வகையில் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். பதவி ஏற்ற சில மணி நேரத்தில் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இது மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரச்சரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற களமிறங்கியுள்ளார் ஸ்டாலின்.

இந்தியாவில் 180 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பணியை தற்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று மாற்றியமைத்துள்ளார். தற்போது அவர் மக்களிடம் பெற்ற புகார்களில் முதற்கட்டமாக 6 லட்ச புகார்களை கணினியில் ஏற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இந்த திட்டத்தை செயல்படுத்தும் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்தார். மேலும் புகார்கள் அனைத்தும் துறை ரீதியாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here